| 
 Saravanan's Link Blog..!
 
தீதும் நன்றும் பிறர் தர வாரா Monday, January 30, 2006 
   
    நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...! I'm just highlighting the lines I like. The content was copied from http://thiraippaadal.blogspot.com/2006/01/27.html மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில 
     
   மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு! மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு - சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு! தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு! மோகனமே உன்னைப் போல - என்னை யாரும் மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை! ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல - எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை! (மேகங்கள்) பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்! எரியும் உடலென்று தெரியும் பெண்ணே! என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்! (மேகங்கள்) கண்ணிமையில் சாமரங்கள் வீசும் காற்றில் - என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்! துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம் - அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்! (மேகங்கள்) செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்! - உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்? எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்? இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் - என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்! (மேகங்கள்) மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம் - மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி! ஓடி ஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே! - நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி...! (மேகங்கள்) விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது? Just highlighting the the lines I like in this song. This song was originally typed in this page http://thiraippaadal.blogspot.com/2006/01/32.html இல்லை இல்லை சொல்ல, ஒரு கணம் போதும்! இல்லை என்ற சொல்லை, தாங்குவதென்றால், இன்னும் இன்னும் எனக்கோர், ஜென்மம் வேண்டும்! என்ன சொல்லப் போகிறாய்? சந்தனத் தென்றலை, ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா? நியாயமா? காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன? மெளனமா? மெளனமா? அன்பே எந்தன் காதல் சொல்ல, நொடி ஒன்று போதுமே! அதை நானும் மெய்ப்பிக்கத்தானே, ஒரு ஆயுள் வேண்டுமே! (இல்லை) இதயம் ஒரு கண்ணாடி! உனது பிம்பம் வீழ்ந்ததடி! இதுதான் உன் சொந்தம், இதயம் சொன்னதடி...! கண்ணாடி பிம்பம் கட்ட, கயிறொன்றும் இல்லையடி! கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி! நீ ஒன்று சொல்லடி பெண்ணே - இல்லை நின்று கொல்லடி கண்ணே! எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில், என்னைத் துரத்தாதே! உயிர் கரையேறாதே! (இல்லை) விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது? பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி! இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது? கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி! பல உலக அழகிகள் கூடி - உன் பாதம் கழுவலாம் வாடி! என் தளிர் மலரே இன்னும் தயக்கம் என்ன? என்னைப் புரியாதா இது வாழ்வா? சாவா? (இல்லை) என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்? நியாயமா? நியாயமா? என்ன சொல்லப் போகிறாய்?என்ன சொல்லப் போகிறாய்? மெளனமா? மெளனமா? என்ன சொல்லப் போகிறாய்.....? Tuesday, January 17, 2006 
   
    
  
   
        Thursday, January 05, 2006 
   
    cool amul ads Welcome to Amul - The Taste of India This page contains all cool ads prepared by Amul, The Taste Of India.  | 
 
 
  |